கால அட்டவணை

திங்கள், 28 மார்ச், 2011

விளையாட்டு!



விளையாட்டு இன்று
விலை ஆயிற்று

காணும் கண்களும்
காசும் விரயம்

வெற்றி எனும் கனவும்
விதண்டாவாத வெறுப்பும்

சொன்னாலும் புரிவதில்லை
கேட்கும் நிலையில்லை

பலன் யாருக்கு........?
பணம் யாருக்கு......?



10 கருத்துகள்:

Chitra சொன்னது…

கலை/திறமை என்று பார்த்தால் அதுதான். பொழுதுபோக்கு என்று பார்த்தால் அதுதான். சூதாட்டம்/வியாபாரம் என்று பார்த்தால் அதுதான். அவரவருக்கு வேண்டிய முறையில் அணுகுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

அந்நியன் 2 சொன்னது…

பலனும் பணமும் அவர்களுக்குத்தான்.

நாம் பனிவிடை செய்வதும் அவர்களுக்குத்தான்.

பல்லாக்கு தூக்குவதும் அவர்களுக்குத்தான்.

பாராட்டு கிடைப்பதும் அவர்களுக்குத்தான்.

கார்கில் போரில் இந்திய வீரர்கள் மாண்ட போதும்..மக்கள்கள் கை தட்டியதும் (கிரிக்கெட்)அவர்களுக்குத்தான்.

வாழ்த்துகள் சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் உண்டாவதாக சகோ.இளம்தூயவன்.

நல்லதொரு சமயத்தில் தேவையான விழிப்புணர்வூட்டல்..! நன்றி..!

//பலன் யாருக்கு........?
பணம் யாருக்கு......?//

நாளை...

உலகக்கோப்பை கிரிக்கெட்
"இந்தியா vs பாகிஸ்தான்"
மொஹளியில் அரைஇறுதி கிரிக்கெட்.

இது ஒரு அப்பட்டமான பொய்...!

உண்மை எது..?

ICC CUP CRICKET
SEMI FINAL @ MOHALI
" BCCI TEAM Vs. PCB TEAM "

இதுதான் நிஜம்.

இரு அரசுகளுக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

இதில் குவியும் லாபம் ட்ரில்லியன் ரூபாய்களில், ஒற்றை ரூபாய் கூட அரசு கருவூலம் சென்று ஏழை மக்களுக்கு உதவப்போவதில்லை.

வெகுவிரைவில்...

" I WANT TO BECOME BCCI PRESIDENT RATHER TO BECOME POOR AMERICAN PRESIDENT..! " ---என்று பில்கேட்ஸ் சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கு கிரிக்கெட் தெரியாது ஸோ கவிதை பிடிச்சிருக்கு அக்காங்...

vanathy சொன்னது…

நல்ல கவிதை. அரசியல் தொடக்கம் விளையாட்டு வரை எங்கும் பணம் தான்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கிரிக்-கெட்டு போச்சுங்க!
சூப்பருங்க, நறுக்குன்னு!

Asiya Omar சொன்னது…

எங்கு தான் பணம் விளையாடலை? எங்கும் பணம் எதிலும் பணம் இப்ப நிலைமை அப்படி.
நல்ல கேள்வி..

Krishnaveni சொன்னது…

timely kavidai, nandraaga ullathu sir

ஹேமா சொன்னது…

எப்பிடித்தான் சொன்னாலும் இந்தப் பைத்தியம் பிடிச்சவங்களுக்கு மருந்தே இல்ல தூயவன் !

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

அந்நியன் 2 கூறியது...

முஹம்மத் ஆஷிக் கூறியது..

MANO நாஞ்சில் மனோ கூறியது

vanathy கூறியது...

NIZAMUDEEN கூறியது...

asiya omar கூறியது...

Krishnaveni கூறியது...

ஹேமா கூறியது...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது..

கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.