நீண்ட நேரமாகியும் சமீம் உறங்கவில்லை. அவன் பலமுறை உறங்க முயன்று தோல்வியே கண்டான், காரணம் நாளை அவன் செல்ல இருக்கும் 20 தாவது நேர்முக தேர்வு.
அவனுக்கு
கிடைக்குமா என்ற கவலை. MBA முடித்து ஒரு வருடமாகின்றது சரியான வேலை கிடைக்கவில்லை.
வாப்பா உடன் சேர்ந்து விவசாயம் செய்யலாம் என்றால். வாப்பா அது என்னோடு போகட்டுமே நீ படித்த படிப்புக்கு உரிய வேலையில் சேர முயற்சி செய் என்கிறார். எப்படியும் ஒரு நல்ல வேளையில் சேர்ந்து வாப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்கின்ற முயற்சி தள்ளி போய் கொண்டே இருக்கின்றது.
மறுபுறம் திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை.
வாப்பாவின் வருமானமோ குடும்ப செலவிற்கே சரியாக உள்ளது.

அதிகாலை தொழுகைக்கு பின், சூரியன் உதயத்திற்கு முன் செல்வார்கள். மாலை சூரியன் மறைவிற்கு பின் வீடு திரும்புவார்கள்.
ஒரு முறை வாப்பாவின் காலில் ஏற்பட்ட காயம், ஒரு மாதம் வயல் பக்கமே செல்ல முடியவில்லை.
பல முறை அறுவடை நேரங்களில் ,பெய்த கன மழையால் பயிர்கள் முற்றும் அழிந்து போய் விடும்.
நாங்கள் விவசாயியாக பிறந்தது குற்றமா?. இதற்கு விடிவு காலம் தான் எப்பொழுது?
சில நேரங்களில் எங்களையும் அறியாமல்,கண்களில் நீர் வடிவதை தடுக்க முடியாது.
அவர்கள் என் படிப்பிற்காக பட்ட கஷ்டங்கள்,என் கண்களை பல முறை குளமாக்கி உள்ளது. தொழுகையின் அழைப்பு சத்தம், பொழுது விடிந்து விட்டதை உணர்த்தியது.
முழு நம்பிக்கையுடன் புறபட்டான்.