கால அட்டவணை

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு தொடர் பதிவு 2010 - 2011

சகோதரி ஆசியா உமர் அவர்களின், தொடர் பதிவிற்கான அழைப்பை ஏற்று இந்த இடுகையை வெளியிடுகிறேன்.  

மனிதர்களில் கனவு காணாதவர்கள் இருக்க முடியாது. வாழ்க்கை இப்படி தான் வாழ வேண்டும்.என்று எனக்குநானே ,சில வட்டங்களை போட்டு கொள்வது என் பழக்கம். அன்பான மனைவி  அழகான இரண்டு பிள்ளைகள். என்மகன் 7 வகுப்பு படிக்கின்றார் , என்மகள் 2 வகுப்பு படிக்கின்றார் . இது என்னை பற்றி ஒரு அறிமுகம்.


1 . அன்பாக பேசுவது , நாமெல்லாம் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்ற ஒற்றுமையை கடை பிடிப்பது.

2 . சிங்கையில் பணியாற்றும் எனது நண்பர்களோடு, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்பு கொண்டது. இந்த முறை விடுமுறையில் ஊர் சென்றிந்த பொழுது,பத்து ஆண்டுகளுக்கு பிறகு,நாகூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் சென்று வந்தேன். ஈரோட்டு மக்களிடம் எனக்கு பிடித்தது, ஊரை சுத்தமாக வைத்து கொள்வது. இன்றும் அவர்கள் அதை கடை பிடித்து வருகிறார்கள்.

3. சும்மா வலைப் பூவில் கிறுக்கி கொண்டு இருந்த என்னை, சகோதரி ஆசியா உமர் அவர்கள், ஒரு அவார்டை கொடுத்து, என்னை எழுத ஊக்குவித்தார்கள். இன்றைக்கு இந்த வலைப் பூ என்னுடைய பொழுது போக்கு.

4. எனக்கு தெரியாமல் எனக்காக என் மனைவி வாங்கி வைத்து, எனக்கு கொடுத்த சில பரிசுகள்.

5. எனது அன்பு மகள் சுதந்திர தினத்தில் பள்ளியில் நடந்த விழாவில் பேசியது. காரைக்கால் F M ரேடியோவில் ஒளிபரப்பானது.

6. பிடித்த மனிதர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. அன்பாக பேசுபவர்கள் அனைவரையும் பிடிக்கும். முதல் அமைச்சர் கருணாநிதியின் பேச்சு தமிழ் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

7. மெஹ்ரான் பிரியாணி மசாலாவில் நான் செய்த பிரியாணி. என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்து விட்டது.

8. எனக்கு ரொம்ப பிடித்த இடம் ஊட்டி. என் தாய் நாட்டை மிகவும் நேசிப்பவன். ஆதலால் மற்ற நாடுகளை குறிப்பிட மனமில்லை.

9. இந்த ஆண்டில் எனது தம்பிக்கு U K நாட்டு வங்கியில் வேலை கிடைத்தது. இந்த முறை தாயகம் சென்று இருந்த போது,
பல மூதாட்டிகள் ரோட்டில் அனாதைகளாக கிடப்பதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. நான் இறைவனிடம் அந்த நேரத்தில் கேட்டது, யாருக்கும் இந்த நிலை வேண்டாம் என்று.

10. வாழ்க்கை சாதிக்க வேண்டும் என்கின்ற எந்த நோக்கமும் கிடையாது. வாழ்க்கையில் முடிந்த வரை பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதும் உண்டு.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

தோல் பொருட்கள்

     இன்று அதிகமாக ஏற்றுமதி செய்யும் தோல் பொருட்களில் தோல் ஷூ மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியன முதலிடம் பெறுகின்றன. தோல் பேக், தோல் பெல்ட், மணிபர்ஸ் போன்ற பொருட்களும் ஏற்றுமதியில் இடம் பெறுகின்றன.

தோல் ஜாக்கெட்
     
   இவை மாட்டு தோல் மற்றும் ஆட்டு தோல் இந்த இரண்டிலும் தயாரிக்கின்றார்கள்.



பெரிய நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான தோல்களை அவர்களே தங்களுடைய சொந்த தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்றார் போல் தயாரித்து கொள்வார்கள், இதனால் இவர்கள் இலாபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது. தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாத

சிறிய நிறுவனம், (சென்னை) பெரியமேட்டில் உள்ள தோல் விற்பனையாளர்களிடம் சென்று ,அவர்களுக்கு வேண்டிய தரத்தை உடைய தோலை கொள்முதல் செய்வார்கள்.

தோல் ஜாக்கெட் தயாரிக்க தையல் தெரிந்தவர்களும், தையல் மெஷினும் (இயந்திரமும்) முக்கியம்.இந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் ,தோல் பற்றி அறிந்து இருப்பது நன்று. இவர்கள் தனக்கு கிடைத்த ஆர்டருக்கு ஏற்றாற்போல் பல மாடல்களை தயாரிக்கின்றனர். இந்த தொழிலை யாரும் தொடங்கலாம்.

தோல்  ஷூ


இந்த தொழில், நவீன தொழில் நுட்பத்தை மையமாக கொண்டது. இதை தயாரிக்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் அவசியம். அப்பர் தனியாகவும் லைனிங் தனியாகவும் பாட்டம் தனியாகவும்
தயாரிக்கப்பட்டு ,பிறகு மூன்றையும் ஒன்றாக இணைத்து,
ஷூவை முழுமை அடைய செய்கிறார்கள். சிறிய நிறுவனங்கள் லைனிங் மற்றும் பாட்டங்கள் தயாரித்து இவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பான்மையான இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை தொடங்க அதிக முதலீடு தேவை படுகிறது. தொழில் நடத்துபவர் தோலை பற்றியும், அதன் தரம் பற்றியும் அறிந்து இருக்க வேண்டும்.


இந்த தொழிற்சாலைகளில் பேட்டன் எடுத்து கட்டிங் செய்து கொடுக்கும் மாஸ்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான முறையில் பேட்டன் செய்து கொடுக்க வேண்டும்.


தோல் வேஸ்ட் ஆகாமல் கட்டிங் செய்து கொடுப்பது மூலம், அந்த நிறுவனம் எந்த சேதாரமும் இல்லாமல், தன்னுடைய இலாபத்தை பார்க்க முடியும். இது அல்லாமல் கட்டிங் செய்யும் போது, கழியும் சிறு சிறு தோல்களை எடுத்து அவற்றை கொண்டு ,கீ செயின்
மற்றும் சிறிய பர்ஸ் போன்ற சில பொருள்கள் செய்து பயன் அடையலாம். பெரும்பான்மையான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டிற்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றது.

கழிவு நீர்

     சகோதரி ஹுசைனம்மா அவர்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி விவரிக்க சொல்லி இருந்தார்கள். இந்த இடத்தில் அது பற்றி கொஞ்சம் கூற கடமை பட்டுள்ளேன். வெளியேறும் கழிவு நீரை பெரிய தொட்டியில்
சேகரித்து, அவற்றை இயந்திரத்தின் உதவியுடன் சுத்திகரித்து ,பிறகு அவற்றை அதற்கு என ஒதுக்கப்பட்ட
தொட்டியில் சேகரித்து ,அந்த தண்ணிரை மீண்டும் உபயயோகப்படுத்துகிறார்கள். சுத்திகரிப்பு நிலையத்தை
உருவாக்குவதற்கு மட்டும் இவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது.


என்ன நண்பர்களே! இன்னும் நிறைய கூற வேண்டும் என்று தான் ஆசை. வேலை நிமித்தம் காரணமாக முடியவில்லை.

அவார்ட்

இந்த அவார்டை கொடுத்து ஊக்குவித்த சகோ. அப்துல் காதர் அவர்களுக்கு மிக்க நன்றி.

சனி, 18 டிசம்பர், 2010

தோல் (LEATHER )

இன்று இந்தியாவில் ஏற்றுமதி தொழிலில் முக்கிய பங்கு, தோல் வியாபாரத்திற்கு உண்டு.

     இந்தியாவில் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள், ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

பொருள்கள் தயாரிப்பதற்கு தோல் எவ்வாறு பதனிடப்படுகின்றது என்று பார்ப்போம்.

தோல்கள் - இவை மூன்று வகைகளாக பிரிக்கலாம் .

1. மாட்டு தோல்

2. ஆட்டு தோல்

3. எருமை தோல்

அதிகமாக பொருள் தயாரிக்க பயன்படுவது மாட்டு தோலும் ஆட்டு தோலும் தான் .

பச்சை தோல்(RAW )

     இறைச்சி கடைகளில் இருந்து பெறப்படும் இந்த தோலை சிறு வியாபாரிகள் முதலில் உப்பிட்டு பதனிடுகிறார்கள். அதன் பின் அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுகிறார்கள்.

மாட்டு தோல் பதனிடுவதற்கு ஈரோட்டுக்கும், ஆட்டு தோல் பதனிடுவதற்கு வாணியம்பாடி, ஆம்பூர், ராணிபேட்டை போன்ற ஊர்களுக்கும், மொத்த வியாபாரிகள் எடுத்து செல்கிறார்கள்.

பதனிடும் முறை :

     முதலில் இரண்டு நாள் பெரிய தொட்டியில் ஊற வைத்து அவற்றில் உள்ள உப்புகளை அகற்றுவார்கள்.

     பிறகு மேனியில் உள்ள முடிகளையும் மற்றும் ஜவ்வுகளையும் அகற்றுவதருக்கு சில கெமிகல்களை தொட்டி (யி) ல் போட்டு மீண்டும் ஊற வைப்பார்கள்.


       நன்கு ஊறிய பிறகு அவற்றின் மீது உள்ள முடிகளையும் உள் பகுதியில் உள்ள ஜவ்வுகளையும், கட்டையின் மீது சாய்த்து வைத்து பெரிய கத்திகளால் அகற்றுவார்கள். அதன் பின் தோலை நன்கு கழுவி விட்டு. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம்மில் போட்டு அவற்றில் கெமிக்கல் போடப்பட்டு சில மணி நேரம் அவற்றை சுற்ற விடுவார்கள். பிறகு கெமிக்கல் போடப்பட்ட தண்ணிரை அகற்றி விட்டு, டிரம்மில் தண்ணீர் மட்டும் செலுத்தி கழுவுவார்கள்.



     பிறகு அந்த தோலை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து தண்ணீர் வடிய வைப்பார்கள்.

     நான்கு நாட்களுக்கு பிறகு அவற்றை வகை பிரிப்பார்கள். இதற்கு வெட் ப்ளூ என்று கூறுவார்கள்.

வகைகள்

ஓன்று

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

ஆறு

என்று வகை படுத்துவார்கள். அவற்றில் ஓன்று, இரண்டு மற்றும் மூன்று வகைகள் சதுர அடி நல்ல விலைக்கு விற்கப்படும். நான்கு, ஐந்து மற்றும் ஆறு சதுர அடி குறைவான விலைக்கு விற்கப்படும்.

      இதன் பின் பொருள் தயாரிக்கும் நிறுவனம் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் அவற்றிற்கு கலர் ஏற்றுவார்கள், அந்த கலர் ஏற்றுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டிரம் பயன்படுத்துவார்கள். மேனியில் கலர் ஸ்ப்ரே மூலம் பெய்ண்ட் ஏற்றுவார்கள் .

     தோல் கோட்டுகள் தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள். ஷூ தயாரிப்பதற்கு அதற்கு ஏற்றார் போல் மாற்றுவார்கள்.




     இதற்கு என்று தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் உண்டு. இதுவரை தோல் பொருள்கள் செய்வதற்கு எவ்வாறு பதப்படுத்த படுகிறது என்று பார்த்தோம். பொருள்கள் எவ்வாறு தயாரிக்கபடுகின்றது என்பதை பிறகு காணலாம்.

சனி, 11 டிசம்பர், 2010

சிந்தனைக்கு சில....

நல்ல பெண்மணி

     கணவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு அதற்குள் அடங்குமாறு குடும்பத்தின் செலவுகளைச் சிக்கனப் படுத்தும் குடும்பத் தலைவியே மிகவும் போற்றத் தக்க நல்ல பெண்மணி.

துணிகளை பரிசோதிக்கும் முறை

     நல்ல பட்டாக இருந்தால் கை விரலை அதன் மீது வைத்து அழுத்தினால் கை ரேகைகள் துணி மீது பதிந்ததும் உடனே மறைந்து விடும். பட்டோடு வேறுவகை நூல்கள் கலந்திருந்தால் அந்த ரேகை அப்படியே இருக்கும்.

ஜலதோஷம் நீங்க

     ஜல தோஷம் ஆரம்பமாகும் அறிகுறி தென்பட்டவுடன் ஓமத்தை இடித்து உச்சியில் அரக்கிக் குளித்தால் ஜலதோஷம் மாறி விடும்.

கேப்பையின் கீர்த்தி

     கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியைப் போட்டுக் கூழ்காய்ச்சிக் சாப்பிட்டால் சிறுநீர் தடையின்றிப் பிரியும். உடலோ குற்ரால அருவியில் குளித்ததுபோல் பூவாய் இருக்கும்.

கண் வளையம்  

     சிலருக்குக் கண்ணைச் சுற்றிலும் கருவளையம் காணப்படும். அது பலவீனம் காரணமாக ஏற்பட்டதாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடியைக் குழைத்து நன்கு காய்ச்சி அதனைத் குளிப்பதற்கு முன் கண்ணைச் சுற்றிலும் தேய்த்துப் பின் பத்து நிமிடம் ஊற வைக்கவும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வருகையும் செய்தியும்

இனிய நண்பர்களே மற்றும் சகோதர சகோதரிகளே,

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,

     விடுமுறை கழிந்தது, பணிக்கு திரும்பி விட்டேன். ஆனால் தாயகத்தின் தாக்கம் நெஞ்சில் தவிர்க்க முடியாத ஓன்று. நாட்டில் ஒவ்வொரு இந்தியனும் நான் வளர்ந்து உள்ளேன், நம் நாடு வளர்ந்து உள்ளது, என்கின்ற பெருமை அனைவரின் முகத்திலும்
தெரிகின்றது. இதை விட என்ன சந்தோசம் வேண்டும். அந்நிய நாட்டில் பணியாற்றும் அனைவரும் அடிகடி தாயகம் சென்று வாருங்கள். ஏன் சொல்லுகின்றேன் என்றால், தாயகத்தின் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் வேகமாக உள்ளது. நம் ஊரிலேயே நம்மை யார் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்கின்ற நிலை வரும் முன் காப்போம். அவை என்றும் நம் நாடு அனைவரும் நம் மக்கள். உலகமே பணம் இருந்தால் பாசம் உண்டு என்கின்ற நிலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது, நம் நாடு மற்றும் விதி விலக்கா என்ன?. நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அதி வேகமாக செல்கிறார்கள்,அதில் பெரும்பான்மையானவர்கள் இளைய தலைமுறை.

பிள்ளைகள் விசயத்தில் பெரும் கவனம் செலுத்த கடமை பட்டுள்ளோம்.