கால அட்டவணை

ஞாயிறு, 11 ஜூலை, 2010

புலம்பல்

     எங்கள் வங்கியில் பணம் அனுப்ப வரிசையில் நின்ற
 ஒரு வாடிக்கையாளரின் புலம்பல், என் செவிகளுக்கு
எட்டியதை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.


வெளிநாடு செல்ல

ஏஜென்ட் இடம்

நின்றேன் வரிசையில்



மருத்துவ பரிசோதனைக்கு

மருத்துவ மனையில்

நின்றேன் வரிசையில்



விமானத்தில் பயணிக்க

சக பயணிகளோடு

நின்றேன் வரிசையில்



காலையில் வேலைக்கு செல்ல

நிறுவன வாகனத்திற்காக

நின்றேன் வரிசையில்



மாதம் முடிந்தது

ஊதியத்தை பெற

நின்றேன் வரிசையில்



குடும்பத்தை நினைத்தேன்

இப்பொழுது வங்கியில்

நிற்கின்றேன் வரிசையில்......

16 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

இது என்ன கவிதைய இல்ல கதைய சொல்லுங்க...

நாடோடி சொன்னது…

உண்மைதான் ந‌ண்ப‌ரே... இந்த‌ புல‌ம்ப‌ல்க‌ள் அதிக‌ம் பார்க்க‌ முடியும்..

தூயவனின் அடிமை சொன்னது…

rk guru கூறியது...

வாங்க R K குரு, இது கவிதையல்ல ,ஒரு நபரின் புலம்பல்.உண்மை சம்பவம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், என்னால் முடிந்த வரை , சிலரின் குறைகளை இங்கு வெளி உலகிற்கு தெரிவிக்க முயல்கின்றேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown சொன்னது…

ம்,, ஆமா சரியான புலம்பல்தானே சார் :)

தூயவனின் அடிமை சொன்னது…

ஆறுமுகம் முருகேசன் கூறியது

வாங்க ஆறுமுகம் முருகேசன், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாது. முடிந்த வரை, பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்யலாம்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க சார்.

மத்தபடி நீங்கதான் வரிசையிலயே நிக்க விடுறதில்லையே. வந்தா கடகடன்னு முடிச்சு அனுப்பிடுறீங்களே.(நல்ல சர்வீஸ்னு சொன்னேன் சார்)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உண்மையத்தான் சொல்லிருக்காரு அந்த நபர். அதை நீங்கள் கவிதையில் வடித்தது அழகாக உள்ளது.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க சரவணகுமார், எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுகிறோம், சில நேரங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகின்றது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க ஸ்டார்ஜன், கவலையில்லா மனிதர் இல்லை ,அவருக்கு அந்த நேரத்தில் ஆறுதல் என்னால் கூறமுடியவில்லை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அண்ணாமலை..!! சொன்னது…

சொர்க்கமா..?
நரகமா..?
தெரியவில்லை..!
நிற்கிறேன் வரிசையில்!

இங்கயுமா?
:)

தூயவனின் அடிமை சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது

வாங்க அண்ணாமலை, அதுக்கும் வரிசை தான், மக்கள் தொகை எல்லையை தாண்டி கொண்டு உள்ளது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

this is the fact...nicely written

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

புலம்பல் என்றபோதும் உண்மையிலும் உண்மை..

தூயவனின் அடிமை சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.