கால அட்டவணை

சனி, 4 ஜூன், 2011

திசை மாறும் காற்று



வாசனை திரவியம் பூசி

வலம் வந்த காலம்
அதற்கு பெயர் இறந்த காலம்

நோய் வாய் பட்டு படுக்கையில்
காலை கடனை கழிக்கும் நிலை
இதற்கு பெயர் நிகழ்காலம்

உடலை துணியில் சுற்றி
நிரந்தர உறக்கம் என்பார் மண்ணறையில்
அதற்கு பெயர் எதிர்காலம்

தவறான வழியில் திரவியம் தேடி
ஈன்று எடுத்த செல்வங்களுக்கு
அள்ளி கொடுத்தாயே

இன்றோ உன்னை
திரும்பி பார்க்க
நாதியில்லை உலகத்திலே

இவையெல்லாம் மறந்து நாம்
ஆடும் ஆட்டங்கள்
எக்காலத்திற்கும் பயன் அன்று.



17 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

கடைசி பாரா சூப்பர்...அனாதைகளாக இருக்கும் பெற்றோர்களுக்கு கவிதை அர்பணம் ... வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

சூப்பர் கவிதை. அசத்தல்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இவையெல்லாம் மறந்து நாம்
ஆடும் ஆட்டங்கள்
எக்காலத்திற்கும் பயன் அன்று.//


உண்மையும், நிதர்சனமும் ம்ஹும்...!!!

ஸாதிகா சொன்னது…

வாழ்கையை அழகிய கவிதை வடிவில் நச்சென்று கூறிவிட்டீர்கள் ச்கோ

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//தவறான வழியில் திரவியம் தேடி
ஈன்று எடுத்த செல்வங்களுக்கு
அள்ளி கொடுத்தாயே

இன்றோ உன்னை
திரும்பி பார்க்க
நாதியில்லை உலகத்திலே//

இப்பவெல்லாம் நல்ல வழியில் பொருள் சேர்த்து கொடுத்தாக்கூட யாரும் திரும்பி பார்க்க மாட்டாங்க.

நமக்குன்னு கொஞ்சம் சேர்த்து வச்சா பிற்காலத்துக்கு உதவும்.

நல்ல கருத்துள்ள கவிதை சகோ.

ஹேமா சொன்னது…

இன்றைய பெற்றோர்கள் கொஞ்சம் விழிப்புடன் இருக்கத் தொடங்கியிருக்கிறார்கள் தூயவன்.நல்ல கவிதை !

arasan சொன்னது…

நல்லதொரு கவி வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Asiya Omar சொன்னது…

சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ க‌ருத்துட‌ன் ஒரு க‌விதை சூப்ப‌ர் த‌ல‌..

தூயவனின் அடிமை சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

வாங்க சரவணன், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது..

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க அரசன், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, நலமாக உள்ளோம் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.