கால அட்டவணை

வெள்ளி, 10 ஜூன், 2011

எங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு)



     தன் சொந்த ஊரை பற்றி கூறும் பொழுதுஎல்லோருக்கும்
ஒரு சிறு சந்தோசம் இருக்கும்.
     அது போல் எங்கள் சொந்த ஊரை பற்றி எழுதுவதில் 
நான் மிக பெருமை அடைகிறேன்.
நாகூர்   நா+கூர்  நாக்கு கூர்மை உடையவர்கள்அதாவது தமிழ் 
ஆர்வலர்கள் அதிகம் உள்ள ஊர் ஆகும்.     அவ்வாறான
புலவர்களை கடைசியாக  உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
     எங்களுடைய ஊர்  ஓர் சுற்றுலா தளம்.     எங்கள் ஊர் தமிழகம்
மற்றும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழ்
பேசுபவர்கள் அனைவரும் அறிந்த ஊர்.
     கட்டிட கலையை  பறை  சாற்றும் வண்ணமாக உயர்ந்த மினாரா 
இங்கு உள்ளது.
    இங்கு வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் மரைக்காயர்
மற்றும் மாலுமியார்கள் என்கின்ற வம்சா வழிகள் பற்றி சிறிது கூற 
கடமை பட்டுள்ளேன்.
     மரக்கலம் வாணிபம் செய்ததால் இவர்களுக்கு  மறைகளைராயர் என்கின்ற 
பெயர் மருவி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.பாய் மர கப்பல் முதலாளிகளாகவும்,கப்பலை இயக்குபவர்களாகவும்,இருந்ததால் இவர்களை
மாலிம் என்று அழைக்கப்பட்டனர் . 
   இவர்கள் பெரும்செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள் . கடல் கடந்து  
வாணிபம் செய்த  பெருமை இவர்களுக்கு உண்டு.
     ஆங்கிலேயர்கள்ஆட்சி  காலத்தில் , இவர்கள்  தொழில்  
முழுமையாக  நசுக்கப்பட்டது .
இவர்களின் நெசவு தொழிலும் முற்றிலும் அழிக்கப்பட்டது .
அந்த நேரத்தில் சில தலைவர்கள் தன் நாட்டுப்பற்றை நிரூபிக்கவும் 
ஆங்கிலேயர் மீது உள்ள தன் வெறுப்பை வெளிபடுத்தவும்ஆங்கிலம்
படிக்க கூடாது என்று எடுத்த தவறான முடிவு , எங்கள் ஊர் மக்களை
முற்றிலும் பின் தள்ளி விட்டது. 
     சமிப காலங்களில் இளைய தலைமுறையின் விழிப்புணர்வால்
இன்று முன்னேறி வருகிறார்கள். இவர்கள் வரலாற்றை
புரட்டினால் நிறைய கூறிக் கொண்டே போகலாம்.
     இங்கு உள்ள ஹோட்டல்களில் இரவு உணவுகள் கொத்து புரோட்டா, 
மீங்கொரி, லாப்பை,  ரொம்ப பிரபலமானவை.
     திருமண வைபவங்களில் பிரியாணி மற்றும் ஐந்து வகை புலவு 
சாப்பாடு பிரபலம்.
     வெளிநாட்டு பொருள்கள் விற்பனை கடைகள் எங்கள் ஊரில் அதிகம். 
அந்த ஏரியாவை கூறும் பொழுது சிங்கப்பூர் கடைத் தெரு என்றே 
அழைப்பார்கள். 
     எங்கள் ஊரின் எல்லை முடிவு , புதுவை மாநில எல்லை ஆரம்பமாகிறது. 
எல்லா ஊர்களுக்கும் நீர் வளம் ரொம்ப முக்கியம், எங்கள் ஊரில் கடல் ஆறு குளங்கள் மற்றும் சுவையான நிலத்தடி நீர் உள்ளது.
     எங்கள் ஊரில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது சுனாமி பாதிப்பு. 
புலவர்கள்: 
1. ஆயுர்வேத பண்டிதர் வாப்பு மகன் மகா வித்வான் வா.குலாம் காதிறு நாவலர் .
2. பிச்சை நயினார் மகன் பாவகை வல்ல கல்விக்களஞ்சியம் முகம்மதுப் புலவர்.
3. நெ.மதாறு சாகிபு நகுதா மகன் பெரும்புலவர் நெயினா மரைக்காயர் .
4. கி.அப்துல் காதிர் சாகிபு மரைக்காயர் மகன் மதுரகவி வாருதி செவத்த மரைக்காயர்.
5. இபுறாகிம் லெப்பை மரைக்காயர் மகன் இ.கிதுறு முகம்மது மரைக்காயர் 
6. மீறா லெவ்வை மரைக்காயர் மகன் அல்லி மரைக்காயர்  
7.முகம்மது உசேன் சாகிபு மரைக்காயர் மகன் மு.செவத்த மரைக்காயர் 
8. முஆக்கின் சாகிபு நகுதா மகன் முகியுத்தீன் அப்துல் காதிறுப் புலவர்
9. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முகம்மது சாகிபு மரைக்காயர் 
10. அ.தம்பி சாகிபு மரைக்காயர் மகன் சீரியர் செவத்த மரைக்காயர் 
11. பகீர் முகியித்தீன் மகன் வாஞ்சூர் பகீர்
12. யூ.சின்னத் தம்பி மரைக்காயர் மகன் யூ.சி.பக்கீர் மஸ்தான்
13. ப.கலீபா சாகிபு மகன் பகீர் முகியித்தீன் 
14. முகம்மது நயினா ராவுத்தர் மகன் தரகு நாகூர்க் கனி ராவுத்தர் 
15. ஆதம் சாகிபு மகன் முகம்மது முகியுத்தீன் சாகிபு 
16. தம்பி மாமா மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர் 
17. சி.யூசுபு மகன் வாஞ்சூர் பகீர்
18. ச.அப்துல் காதிர் நயினா மரைக்காயர் மகன் முகம்மது முஹிய்யித்தீன் மரைக்காயர்
19. மீ. செய்கு சுல்தான் சாகிபு மரைக்காயர் மகன் குலாம் முஹம்மது சாகிபு மரைக்காயர்
20. முகம்மது அலி மரைக்காயர் மகன் முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர்
21.கோ.மு. முகம்மது நைனா மரைக்காயர் மகன் (காரைக்கால்) கோசா மரைக்காயர்.
22. சு.பகீர் முகியித்தீன்
23. செ.கமீது மஸ்தான்
24. ம.முகம்மது மீறா சாகிப் புலவர்.
25. தளவாய் ம. சின்னவாப்பு மரைக்காயர்
26. கா. பெரிய தம்பி நகுதா 
27. க.காதிறு முகியித்தீன் சாகிபு 
28.இ.செய்யது அகமது 
29. மு.சுல்தான் மரைக்காயர் 
30. வா.முகம்மது ஹூஸைன் சாஹிபு மகன் மு.ஜெய்னுல் ஆபிதீன் (புலவர் ஆபிதீன்)
31. பண்டிட் எம்.கே.எம் ஹூஸைன்
32. வா.கு. முஹம்மது ஆரிபு புலவர் 
33. வா.கு.மு.குலாம் ஹ¤ஸைன் நாவலர்.

இவர்களுள் காலத்தால் முந்தியவர், முதன் முதலில் இலக்கியம் படைத்தவர் பிச்சை நயினார் மகன் முகம்மதுப் புலவர்.
ஆனால் அதிக எண்ணிக்கையிலான பல்வேறு வகைப்பட்ட இலக்கியங்கள்
படைத்தளித்தவர் வா.குலாம் காதிறு நாவலர் ஆவார்.
இவர்களை தொடர்ந்து :
தூயவன் 
சொல்லரசு ஜாபர் மொய்தீன் 
 கவிஞர் சலீம் 
சித்தி ஜுனைதா 
கவிஞர் z   ஜபருல்லா 
நாகூர் ரூமி 
அப்துல்  யூம்
ஆபிதீன் 
அபுல் அமீன் 
சாரு நிவேதிகா 
ரவீந்தர் 
காதர் ஒலி
இதய தாசன் 
இன்னும் கூறிக் கொண்டே போகலாம் 
எங்கள் ஊரையும் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த சிறிய பதிவு. 
என்னை தொடர் பதிவு அழைத்த சகோதரி ஸாதிகா  அவர்ககுக்கு மிக்க நன்றி. 

28 கருத்துகள்:

vanathy சொன்னது…

நிறைய அரிய தகவல்களுக்கு நன்றி.

Unknown சொன்னது…

ரொம்ப சந்தோசம் நமது பக்கத்துக்கு ஊரை பற்றி எவ்ளோ விவரம் அறிந்துகொண்டேன்
நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்

தினேஷ்குமார் சொன்னது…

நிறைய தகவல்கள் மற்றுமில்லாமால் தமிழ் புலமைமிக்கவர்கள் பற்றியும் அறிந்து கொண்டோம் நன்று...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்கள் ஊர் பற்றிய பல விசயங்களை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.

ஹேமா சொன்னது…

ஊரைப்பற்றிச் சொல்லச் சொன்னல் இவ்ளோ விஷயங்கள் இருக்குமா.
நிறைவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.உண்மையில் என் ஊரைக் கேட்டால் எனக்கு இவ்ளோ சொல்லத் தெரியுமான்னா நிச்சயமா இல்லை.பாராட்டுக்கள் தூயவன் !

மாதேவி சொன்னது…

"நாகூர்" தெரிந்துகொண்டோம்.

ஸாதிகா சொன்னது…

அழைப்பை ஏற்று அழகுர விளக்கமாக பகிர்ந்த உங்களுக்கு நன்றி.நா+ கூர்..அடடா..விளக்கம் அருமை.புலவர்களையும் இலக்கிய மேதாவிகளயும் அறியத்தந்து இருக்கின்றீர்கள்.//வெளிநாட்டு பொருள்கள் விற்பனை கடைகள் எங்கள் ஊரில் அதிகம்.// இவைகளை கொள்முதல் பண்ணுவதற்காகவே உங்அக்ளூருக்கு செல்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.//கொத்து புரோட்டா,
மீங்கொரி, லாப்பை, ரொம்ப பிரபலமானவை.// லாப்பை..உங்கள் ஊர் லாப்பையை எங்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.புதுவிதமாக இருக்கின்றது.

ஸாதிகா சொன்னது…

நாகூர் ஹனீஃபாவை மறந்து விட்டீர்களே பிரதர்?

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உங்க ஊரை பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். வியப்பா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

அரிய தகவல்,thanks

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

Intrerting informations. (naa + koor = nagore). Thanks!

தூயவனின் அடிமை சொன்னது…

siva கூறியது..

வாங்க சிவா, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

தினேஷ்குமார் கூறியது...

வாங்க தினேஷ்குமார், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

மாதேவி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, லாப்பையை முடிந்த வரை படம் எடுத்து போடா முயற்சிக்கிறேன். எப்படி என்று சொல்ல தெரியவில்லை. வீட்டு அம்மா செய்த கொடுக்கும் பொழுது நல்ல சாப்பிட தெரியும். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

நல்ல பாடகர், அவரை நான் சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும் என்பதால் விட்டுவிட்டேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

வாங்க ஷேக், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

உலக சினிமா ரசிகன் கூறியது...

கதைக்காக வருத்த படுகிறிகள், இது உங்கள் தமிழ் பற்றை காட்டுகிறது .

தூயவனின் அடிமை சொன்னது…

பாத்திமா ஜொஹ்ரா கூறியது..

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க சகோ., உங்களோடு தொலைபேசியில் உரையாடியது , மனதிற்கு சந்தோசம்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

அஸ்மா சொன்னது…

பக்கத்து ஊர் என்பதால் நிறைய விஷயங்கள் எங்க சொந்த ஊரைப்பற்றி சொல்வதுபோல் உள்ளது :)

//எங்கள் ஊரில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது சுனாமி பாதிப்பு//

நாகூரில் சுமார் 18 வருஷங்களுக்கு முன் ஒரு பெரிய மதக்கலவரம் நடந்ததே! அதில் பாதிக்கப்பட்ட மக்களை நினைக்கும்போது அதுவும் மறக்க முடியாத ஒன்றுதான் சகோ .

புதுகை.அப்துல்லா சொன்னது…

கம்பன் காதலர் நீதியரசர். மு.மு.இஸ்மாயில் அவர்களை விட்டுட்டீங்களே!

ஆமினா சொன்னது…

ரொம்ப தடவ வந்துருக்கேன்... கடற்கரையில் இருந்த தென்னை,பனை தோட்டத்தில் சமைத்து சாப்பிட்டு இடையிடையே இருக்கும் நேரத்தில் கடலில் குளித்தது மறக்க முடியாத அனுபவம். மீங்கொரிங், பீப் பக்கோடா, சமோசா என அந்த கடைவீதியே களைகட்டும்

பல விஷயங்களை அறிய தந்தீர்கள்

அப்துல் கையூம் சொன்னது…

நல்ல பதிவு. பிறந்த மண்ணின் பெருமையை பிறருக்கு உரைக்கும் சிறப்பான பாங்கு மெச்சத்தக்கது. தொடர்க இப்பணி. அப்துல் கையூம் (நாகூரி) http://nagoori.wordpress.com