கால அட்டவணை

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்காலம்...?



     உலக்கத்தின் ஒரு பகுதி உணவு இன்றி பசி பட்டினியில் இறந்து வருகிறார்கள். மற்றொரு பகுதி பொருளாதார நெருக்கடியில் சிக்கி
தவித்து வருகிறது. சில பகுதி மக்கள் புரட்சி ஏற்பட்டு வருகிறது.


இதன் முடிவு எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

ஆப்பிரிக்கா கண்டம் :

    இங்கு வசிக்கும் மக்கள் செய்த தவறு என்ன? இவர்கள் கருப்பாக பிறந்தது தவறா? இந்த மக்களின் வாழ்க்கை பசி பட்டினியால்
உயிர் பிரிந்து வருகிறது. மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள், இவர்கள் விசயத்தில் மட்டும் ஓர வஞ்சனை காட்டுவது ஏன்?

இவர்கள் கறுப்பினத்தவர்கள் என்ற ஒரே காரணம் தான்.

இவர்கள் நிறத்தால் கருப்பர்கள் என்று பார்க்கும் அனைவரும்.
இவர்களின் மனதால் எந்த நிறம் என்பதை பார்க்க நினைப்பது இல்லை.

அதன் விளைவு இன்று அந்த மக்கள் கடல் கொள்ளையர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

புரட்சி :



     துனிசியா நாட்டில் ஆரம்பித்த மக்கள் புரட்சி , எகிப்து லிபியாவில் முடிந்து, இப்பொழுது ஏமன் மற்றும் சிரியாவில் வேகம் பிடித்து உள்ளது.

இந்த மக்களின் புரட்சிக்கு காரணம் , ஆளும் வர்க்கம் தொடர்ந்து 42 ஆண்டுகள் 32 ஆண்டுகள் என்று பதவியை தக்க வைத்து கொண்டு.
 தன் நாட்டின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த
வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலை நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கும் வராது என்று யாரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடி :

இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்கா பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன.

கிரேக்க நாட்டில் மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் .

இத்தாலி நாட்டில் ஏற்பட்ட போராட்டம் பெரும் வன்முறையில்
 முடிந்து உள்ளது.

ஸ்பெயின் நாட்டு மக்களும் இப்பொழுது களத்தில் இறங்கி விட்டார்கள் .

அமெரிக்காவில் போராடும் மக்கள் ,அரசை பார்த்து சில கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

அவையாவன போரில் செலவு செய்த பணத்தை கொண்டுவா என்று கோஷமிடுகிறார்கள்.

வால் ஸ்ட்ரீட் என்கின்ற ஒரு பகுதி , பணக்காரர்கள் வசிக்கும் பகுதி.

அங்கு பதிக்கி வைத்துள்ள பணத்தை வெளியில் கொண்டுவா என்று கூறுகிறார்கள்.

முடிவு :

இந்த நிலைக்கு யார் காரணம்? ஆளும் வர்க்கத்தின் தவறான
முடிவுகளே காரணம்.

நாட்டு மக்களை விட தன் சுயநலமும், போலியான கவுரவமே.

இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்கின்ற மனப்பான்மை இல்லா நிலை.

தன் தவறை மறைக்க பிறர் மீது பலி போடுவது.

இன்று உலக வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது, 2012 க்கு
பிறகு உலகம் முழவதும் உணவு பற்றா குறை ஏற்படும் என்றும்,
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று
கூறி வருகிறது.

முதலாளி என்கின்ற பண முதலைகளின் தவறான வழிகாட்டுதலை, ஆளும் வர்க்கம் பின்பற்றுவதே காரணம்.

நிச்சயம் இதற்கு ஒரு நாள் முடிவு உண்டு.



10 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.இளம்தூயவன்,

////////இந்த நிலைக்கு யார் காரணம்? ஆளும் வர்க்கத்தின் தவறான
முடிவுகளே காரணம்.

நாட்டு மக்களை விட தன் சுயநலமும், போலியான கவுரவமே.

இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்கின்ற மனப்பான்மை இல்லா நிலை.

தன் தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது./////////

சிந்திக்க வைக்கும் சரியான வரிகள். நன்றி சகோ.

Asiya Omar சொன்னது…

நீண்ட நாட்கள் கழித்து உங்களை வலைப் பக்கம் பார்க்க முடிகிறதே! தொடர்ந்து எழுதுங்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

இன்னும் விரிவாக அலசியிருக்கலாம் நண்பரே... ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதும் போது அதிக சிரத்தை எடுக்க வேண்டும்...

ஹேமா சொன்னது…

ம்....ஆதங்கம் தூயவன்.
பொருளாதாரம் நிறைந்த நாடுகள் இப்படி யோசித்தாலே நல்லது !

Jaleela Kamal சொன்னது…

//இல்லாதவர்க்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்கின்ற மனப்பான்மை இல்லா நிலை.//

அதிகம் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும் இந்த மனப்பான்மை வந்தால் ஒரளவுக்கு நல்ல இருக்கும்.

இருபப்வர்கள் தான் மேலும் மேலும் பதுக்குகிறார்கள்

rajamelaiyur சொன்னது…

//
நிச்சயம் இதற்கு ஒரு நாள் முடிவு உண்டு.
//
காத்திருப்போம்

Unknown சொன்னது…

இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

புல்லாங்குழல் சொன்னது…

நல்ல கட்டுரை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.

VANJOOR சொன்னது…

தெரிந்து கொள்ளுங்கள்.

இதோ வியப்பான உண்மை தகவல்கள்.

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****


2. **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****

3. **** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
****

.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...